வரவேற்கிறோம்! எங்கள் ஜோதிட சேவைகள் மூலம் உங்கள் எதிர்காலத்தை அறிந்து கொள்ளுங்கள்.
ஜோதிடம் வாழ்வியல் பாதையை காட்டும் ஒளி விளக்கு ஆகும்.
இந்த இணையதளத்தில் வழங்கப்படும் ஜோதிட கணிப்புகள், ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள், பூஜைகள், யந்திரங்கள், ருத்ராட்சங்கள் மற்றும் பிற ஆன்மீக உபயோக பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான ஜோதிடம், ஆன்மீக மற்றும் பொருளாதார பலன்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஜோதிட, வேத, ஆகம, சாஸ்திரங்களின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இன்றைய சமூக, பொருளாதார மற்றும் மதம் சார்ந்த சூழ்நிலைகள் மிகுந்த மாற்றங்களை எதிர்கொண்டுள்ளன. மேலும் அனைத்து ஜோதிடக் கோட்பாடுகளையும் நினைவில் வைத்திருக்கவும், சரியாக பொருத்தவும் மனிதர்களால் முழுமையாகச் செய்ய முடியாத ஒன்றாக இருக்கக்கூடும். அதனால், இங்கு கூறப்பட்ட பலன்கள் செயல்படாதவையாக இருந்தாலும் அல்லது எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் வராதபட்சத்திலும், அதன் பொறுப்பை கார்த்தி முஅ சு(KARTHI MA S) அவர்கள் அல்லது www.karthimas.com தளத்தினருக்கு பொறுப்பில்லை, இடமில்லை என்பதை வாடிக்கையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
ஓம் பூர்புவ: ஸ்வ: தத்ஸவிதுர்வரேண்யம்
பர்க்கோதேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்||
நான் கார்த்தி முஅ சு(KARTHI MA S), பல ஆண்டுகளாக ஜோதிடத்தில் அனுபவமுள்ளவர். உங்கள் வாழ்வியல் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வழங்குகிறேன்.
பாரம்பரிய ஜோதிடம், கே பி ஜோதிடம், வர்க்கச் சக்கரங்களை பயன்படுத்தி பலன் கூறுதல், ஜோதிடத்தில் அஷ்டவர்க்கத்தின் பயன்பாடு, சந்திர நாடி, ஜீவநாடி, கர்ம ஜோதிடம், ஜாமக்கோள் பிரசன்னம், தாம்பூல பிரசன்னம், சோழி பிரசன்னம், அஷ்டமங்கள பிரசன்னம், ஹீப்ரு நியூமராலஜி, இரத்தினங்கள் பயன்பாடு போன்ற பல்வேறு ஜோதிட அறிவினை பல ஜோதிட குருமார்களிடம் பயின்று அவற்றை பல வருடங்களாக ஆய்வு செய்து வருகிறேன். இவற்றுடன் எனது அனுபவத்தையும் சேர்த்து மாணவர்களுக்கு ஜோதிடம் மற்றும் பிரசன்ன வகுப்புகள் எடுத்து வருகிறேன்.
📞 95668 54137
📍 சேரன்மஹாதேவி, திருநெல்வேலி மாவட்டம்.