சகுனி

கரணம் என்பது ஒரு திதியில் பாதி அளவாகும். அதாவது ஒரு திதியில் இரண்டு கரணம் அமைந்திருக்கும். ஆறு பாகை கொண்டது ஒரு காரணமாகும்.

விவசாயம் தொடர்பான செயல்களுக்கு கரணத்தை பயன்படுத்தும் போது சிறப்பான பலனை தருகிறது. குறிப்பாக நிலத்தை உழுவதற்காகவும் விதைகளை விதைப்பதற்கும் நாத்துகளை நடுவதற்கும் கரணத்தின் உதவியுடன் செய்யும்போது சிறப்பான பலனை நடைமுறையில் தருகிறது.

சகுனி கரணம் தேய்பிறை சதுர்த்தசி திதியின் பின்பகுதியில் அமைந்திருக்கும்.

சகுனி கரணம் தன்மைகள்
தன்மை அசுபம்
மிருகம் காகம்
அதிபதி சனி
தெய்வம் சனீஸ்வரர்
தேவதை ஸ்ரீ விஷ்ணு
மலர் செம்பகம்
ஆகாரம் வெல்லம்
பூசுவது சேறு
ஆபரணம் அறுத்த நூல்
தூபம் அகில்
வஸ்திரம் கந்தை
பாத்திரம் கற்பாத்திரம்
தன்மை ஸ்திரம்

சகுனி கரணத்தில் செய்யக்கூடிய காரியங்கள்:

  1. சாந்தி பரிகாரங்கள்
  2. மூல மந்திரம் ஜெபித்தல்
  3. மருந்து தயாரித்தல்
  4. தேவதா பூஜை செய்தல்

இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.

← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு