மகரம்

Navagraghas

ஜோதிடத்தில் கிரகம், இராசி மற்றும் பாவகம் ஆகிய மூன்றின் குணங்கள் பண்புகள் மற்றும் செயல்பாடுகளை உணர்ந்து அறிந்தவர்கள் நல்ல ஜோதிடராக வலம் வர முடியும். இராசிகள் ஒருவர் இருக்கக்கூடிய சுற்றுச்சூழலை வெளிப்படுத்தும். ஒரு இராசியில் ஒரு கிரகம் இருக்கும் போது அந்த கிரகம் எந்த சூழலில் இருக்கின்றது என்பதை இராசி உணர்த்தும். உதாரணமாக வெண்டைக்காய், தோட்டத்தில் காய்த்து இருக்கும். இங்கு வெண்டைக்காய் கிரகம் ஆகும், தோட்டம் இராசியை குறிக்கும். அதே வெண்டைக்காய் தோட்டத்தில் இருந்து கடைக்கு எடுத்து செல்வதற்கு வாகனத்தில் பயணம் செய்யும். இங்கு வாகன பயணம் இராசியை குறிக்கும், வெண்டைக்காய் கிரகத்தை குறிக்கும். தற்போது வெண்டைக்காய் கடைக்கு வந்து சேர்ந்து விட்டது. இங்கு கடை இராசியை குறிக்கும், வெண்டைக்காய் கிரகத்தை குறிக்கும். இதனை மீண்டும் படித்துப் பார்க்கும்போது இராசி என்பது ஒரு சுற்று சூழலை உணர்த்தும் என்பதே புரிந்து கொள்ளலாம். இனி நாம் ஒவ்வொரு இராசிக்கான சுற்றுச்சூழலையும் பார்ப்போம். இதனை ஜோதிடத்தில் இராசி காரகத்துவம் என்று கூறுவார்கள்

மகர இராசியின் காரகத்துவங்களை பார்ப்போம்:

  1. சரம் - நகரும் தன்மை
  2. தாது
  3. பெண் ராசி
  4. இரட்டை ராசி
  5. முழங்கால்
  6. சமம்
  7. சூத்திரன்
  8. பிருஷ்டோதயம்
  9. மங்கலான சிவப்பு
  10. ஆற்று ஓடையுடன் கூடிய நீர் உள்ள காடு
  11. இரவில் பலம்
  12. சௌமியத்தன்மை
  13. தெற்கு திசை
  14. பொருள்
  15. தை மாதம்
  16. நிலம்
  17. சுடுகாடு
  18. பிண அறை
  19. ஜெயில்
  20. துணி துவைக்கும் இடம்
  21. துணி துவைப்பவர்கள்
  22. குகைகள்
  23. குழிகள்
  24. தாழ்வான இடங்கள்
  25. பன்றி தொழுவோம்
  26. மசூதிகள்
  27. உடன் பிறந்தவர்களின் வாழ்க்கை பாதிக்கும்
  28. பாசமானது
  29. குடிசைப் பகுதிகள்
  30. தனித்த இடம்
  31. தாழ்வான வீடுகள்
  32. வீதியின் கடைசி
  33. நதிக்கரை
  34. சமுத்திரக்கரை
  35. தேவாலயங்கள்
  36. கோவில் வளாகம்
  37. கல்லறைகள்
  38. ஆயுதக் கிடங்கு
  39. சதுப்பு நிலங்கள்
  40. திமிங்கலங்கள் மற்றும் முதலைகள் நிறைந்த நீர்
← முகப்பு
Share:

சந்திப்பு முன்பதிவு